Tuesday 3 June 2014

இரு! இருக்காதே!

பெற்றோரிடத்தில்
அன்பாய் இரு!
ஆத்திரமாய் இருக்காதே!

ஆசிரியரிடத்தில்
பண்பாய் இரு!
பக்கிரித்தனமாய் இருக்காதே!

கடவுளிடத்தில்
பக்தியாய் இரு!
படாடோபமாய் இருக்காதே!

நண்பனிடத்தில்
உண்மையாய் இரு!
ஊதாரியாய் இருக்காதே!

உறவினரிடத்தில்
பாலமாய் இரு!
பரிதாபமாய் இருக்காதே!


உன்னிடத்தில்
உறுதியாய் இரு!
    ஊமையாய் இருக்காதே!

No comments:

Post a Comment